விஷால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘ஆம்பள’ படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார். இப்படத்தை தொடர்ந்து ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப் போன்று ஒரு படத்தை இயக்கப்போவதாக ‘ஆம்பள’ படத்தின் வெற்றி விழாவில் சுந்தர்.சி கூறியிருந்தார்.
ஆனால், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து சுந்தர்.சி படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சுந்தர்.சி, மசாலா, பொழுதுபோக்கு, ஆக்ஷன், காமெடி என எந்த வகை திரைப்படங்களிலும் தனது திறமையை அழகாக வெளிப்படுத்தக்கூடியவர்.
அதேபோல், சிவகார்த்திகேயனும் காமெடியை பிரதானமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இவ்விருவரும் இணைவது ரசிகர்களை ரொம்பவுமே சந்தோஷப்படுத்தும் என நம்பப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்தது வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் முடிவடைகிறது.
சுந்தர்.சியும் தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். இவற்றை எல்லாம் முடித்துவிட்டு இருவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து சுந்தர்.சி படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சுந்தர்.சி, மசாலா, பொழுதுபோக்கு, ஆக்ஷன், காமெடி என எந்த வகை திரைப்படங்களிலும் தனது திறமையை அழகாக வெளிப்படுத்தக்கூடியவர்.
அதேபோல், சிவகார்த்திகேயனும் காமெடியை பிரதானமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இவ்விருவரும் இணைவது ரசிகர்களை ரொம்பவுமே சந்தோஷப்படுத்தும் என நம்பப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்தது வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் முடிவடைகிறது.
சுந்தர்.சியும் தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். இவற்றை எல்லாம் முடித்துவிட்டு இருவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Show Konversi KodeHide Konversi Kode Show EmoticonHide Emoticon